கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள ஆய்வுக்‌ குழுவினர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சியில்‌, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, தமிழக அரசின்‌ ஆணையின்படி, கள ஆய்வுக்‌ குழுவினர்‌ இயக்குநா்‌ மண்ணியல்‌ மற்றும்‌ கனிமவளம்‌, சென்னை எ.சரவண வேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலட்சுமி இ.ஆ.ப. ஆகியோர்‌ தலைமையிலான குழுவினர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, தமிழக அரசின்‌ ஆணையின்படி, கள ஆய்வுக்‌ குழுவினர்‌ இயக்குநா்‌ மண்ணியல்‌ மற்றும்‌ கனிமவளம்‌, சென்னை எ.சரவண வேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலட்சுமி இ.ஆ.ப. ஆகியோர்‌ தலைமையிலான குழுவினர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ (முத்திரைத்தாள்‌) ப.காந்திமதி அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர் (கலால்‌) எம்‌.எஸ்‌.கலைவாணி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.68, இராமநாதபுரத்திலுள்ள அம்மா உணவகத்தில்‌ தரமான உணவுகள்‌ தயாரிக்கப்படுகிறதா எனவும்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதையும்‌, தூய்மையாக பராமரிக்கப்படுகிறாதா என்பதையும்‌, பணியாளர்கள்‌ முகக்கவசங்கள்‌ அணிந்து பணியாற்றுகின்றார்களா என்பதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர்‌, காந்திபுரம்‌ மார்க்கெட்டில்‌ ஆய்வு மேற்கொண்டு காய்கறிகளை பொதுமக்கள்‌ சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்குகிறார்களா என்பதையும்‌, பொதுமக்கள்‌ முகக்கவசங்கள்‌ அணிந்துள்ளார்களா என்பதையும்‌ பார்வையிட்டு ஆய்வுக்குழுவினர்‌ ஆய்வு செய்தார்.

பின்னர்‌, டி.பி.ரோடு பகுதியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை பார்வையிட்டு போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ உள்ளதா என்பதையும்‌, புரூக்பில்டூ சாலை அருகில்‌, வார்டு எண்‌.25, சிரியன்‌ சாச்‌ ரோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ சாலைகள்‌ மூடியுள்ளதா என்பதையும்‌, பொதுமக்களுக்கு பரிசோதனைகள்‌ செய்யப்படுகிறதா எனவும்‌, மருத்துவமனையில்‌ சிகிச்சை பெறுவோர்‌ மற்றும்‌ சிகிச்சை முடிந்து வந்தவர்கள்‌ விபரங்களையும்‌, கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கப்படுகிறதா எனவும்‌, தேவையான மளிகைப்‌ பொருட்கள்‌ வினியோகம்‌ செய்யும்‌ விதம்‌ குறித்தும்‌ கள ஆய்வுக்குழுவினா்‌ எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள்‌, ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர்‌, பி.என்‌.புதூரில்‌ அரசு மகளிர்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ தூய்மைப்‌ பணியாளார்களுக்காக கொரோனா வைரஸ்‌ பரிசோதனை முகாம்‌ நடைபெற்றதையும்‌, புலியகுளத்தில்‌ மாநகராட்சியுடன்‌ இணைந்து நல்லறம்‌ அறக்கட்டளை சார்பில்‌ பொதுமக்களுக்கு உணவு வழங்கும்‌ பணிகளுக்காக உணவு தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றதையும்‌ கள ஆய்வுக்குழுவினர்‌ எ.சரவண வேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள்‌, ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, காவல்துறை உதவி ஆணையர்‌ திரு.ரமேஷ்பாபு, துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ என்‌.பிரேமானந்தன்‌, துணை இயக்குநர்‌ (சுகாதாரம்‌) பிஅருணா, நகர்‌ நல அலுவலர்‌ மரு.சந்தோஷ்குமார்‌, மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌ (மேற்கு), மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌), உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, கருப்புசாமி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...