கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தவர்களை கும்மி அடிக்க வைத்து சூலூர் காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தவர்களை கும்மி அடிக்க வைத்து சூலூர் காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே சுற்றி திரிபவர்கள் மீது வாகன பறிமுதல், வாகனத்தில் வர்ணம் அடிப்பது உள்ளிட்ட நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.
இதனையும் மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்ப்பதில்லை. காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் கோவை சூலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கலங்கல் சாலையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது தேவையின்றி சுற்றி திரிந்த இளைஞர்களை பிடித்து வட்டமாக நிற்க சொல்லி கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையை ஆய்வாளர் சவுந்தரபாண்டியன் வழங்கினார்.
கும்மியடித்தபடியே இளைஞர்கள் ஒரு மணிக்கு மேலே வெளியே வரமாட்டோம், விழித்திருப்போம், வீட்டில் இருப்போம், விலகி இருப்போம் என சொல்லியபடி இளைஞர்களை கும்மி அடிக்க வைத்த வீடியோ வெளியாகி உள்ளது.