கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
கோவை: கோவையில் இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவி முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த சேமிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய சரகம் கீரநத்தம் பத்தகாரன் தோட்டத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்பவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கினார்.
இவர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.ஏ. படிக்கும் மாணவி என்பதும், இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தையும் கோவிட் பரவலை தடுப்பதற்காக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய சரகம் கீரநத்தம் பத்தகாரன் தோட்டத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்பவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கினார்.
இவர் பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.ஏ. படிக்கும் மாணவி என்பதும், இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தையும் கோவிட் பரவலை தடுப்பதற்காக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.