கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது நீலகிரி; விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டமாக தற்போது மாறியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டமாக தற்போது மாறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமடைந்துவருகிறது. அதன்வரிசையில் தற்போது நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த 1471 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுவந்த நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 9 பேர் நீலகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஏற்கனவே 8 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உதகை காந்தள் பகுதியை சேர்ந்தவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 9 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரிவித்துள்ளார். 

இதனால் 100 சதவீதம் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இருந்த போதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நபர்கள் அனைவரும், 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தடை செய்யப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தடை நீக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...