பிற மாநில மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கோவை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்தபடுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்தபடுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த முழு நடவடிக்கையின் பேரில் சிவப்பு மண்டலத்திலிருந்து கோவை ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் கூறும்போது;-

இதுவரை கோவையில் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்த 2 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். கோவையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்ட 141 பேரில் தற்போது மொத்தம் 7 பேர் மட்டுமே கோவை மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

மே 3ம் தேதிக்கு பிறகு ஊரக பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் தொழில்கள் அனுமதிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல, மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...