கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சரவணம்பட்டி வாரதாயங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது தாயார் சாந்தாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது சக்தி சாலை மூர் மார்க்கெட் அருகே எதிரில் வந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது.
இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரது தாயார் சாந்தாவை காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ரவிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சி புறவழிச்சாலையில் கஞ்சிக்கோணம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் உயிரிழந்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 38 நாட்களில் நேற்று ஒரே நாளில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை அடுத்த சரவணம்பட்டி வாரதாயங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது தாயார் சாந்தாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது சக்தி சாலை மூர் மார்க்கெட் அருகே எதிரில் வந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது.
இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரது தாயார் சாந்தாவை காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ரவிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சி புறவழிச்சாலையில் கஞ்சிக்கோணம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் உயிரிழந்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 38 நாட்களில் நேற்று ஒரே நாளில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.