கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், முதல் கட்டமாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வால்பாறையிலுள்ள 10வது வார்டில் உள்ள 1500 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கும் பணியினை சசிக்குமார் தலைமையில் சுடர் பாலு, சாய் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் இணைந்து வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.
டோக்கன் வழங்கும் பணியிணை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், முதல் கட்டமாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் ஆகிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வால்பாறையிலுள்ள 10வது வார்டில் உள்ள 1500 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கும் பணியினை சசிக்குமார் தலைமையில் சுடர் பாலு, சாய் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் இணைந்து வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.
டோக்கன் வழங்கும் பணியிணை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.