கோவை: கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது எனவும் பாம்பின் தலை பகுதியை கொரோனா வைரஸ் உருவ மாதிரி போன்று தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.
கோவை: கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது எனவும் பாம்பின் தலை பகுதியை கொரோனா வைரஸ் உருவ மாதிரி போன்று தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிகட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது. பாம்பின் தலை பகுதியை, கொரோனா வைரஸ் உருவ மாதிரியை மெழுகுவர்த்தி கொண்டு வடிவமைத்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் "விழித்திரு" "விலகி இரு" "தனித்திரு" என அரசின் வேண்டுகோளை ஏற்று சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிகட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று நோய் என்பது கொடிய விஷ பாம்பை போன்றது. பாம்பின் தலை பகுதியை, கொரோனா வைரஸ் உருவ மாதிரியை மெழுகுவர்த்தி கொண்டு வடிவமைத்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் "விழித்திரு" "விலகி இரு" "தனித்திரு" என அரசின் வேண்டுகோளை ஏற்று சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.