கோவை: கே.ஜி.டெனிம் குரூப் ஆப் கம்பெனி தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவன செயல் அதிகாரி சந்திரசேகர் தெரிவித்தார்.
கோவை: கே.ஜி.டெனிம் குரூப் ஆப் கம்பெனி தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவன செயல் அதிகாரி சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஜடையாம்பாளையம் பஞ்சாயத்திற்கு இரண்டு லட்சம் மதிப்பிலான முக கவசங்கள், அப்பகுதி மக்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கி வருதாகவும் சுமார் 6000 வடமாநில தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதேபோல, சிறுமுகை பகுதியில் தினமும் தங்களது சொந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு தயார் செய்ய தேவையான பொருட்களை வழங்கி வருவதாக கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நான்காயிரம் முககவசங்களை வழங்கி உள்ளதாகவும் ஊரடங்கு தளர்த்தும் வரை இந்த பணிகளை தொடர கே.ஜி டெனிம் தலைவர் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஜடையாம்பாளையம் பஞ்சாயத்திற்கு இரண்டு லட்சம் மதிப்பிலான முக கவசங்கள், அப்பகுதி மக்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கி வருதாகவும் சுமார் 6000 வடமாநில தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதேபோல, சிறுமுகை பகுதியில் தினமும் தங்களது சொந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு தயார் செய்ய தேவையான பொருட்களை வழங்கி வருவதாக கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நான்காயிரம் முககவசங்களை வழங்கி உள்ளதாகவும் ஊரடங்கு தளர்த்தும் வரை இந்த பணிகளை தொடர கே.ஜி டெனிம் தலைவர் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.