நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று நான்கு வயது மதிக்கத்தக்க கடமான் அங்கிருந்த சிறிய கிணற்றுக்குள் விழுந்ததை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று நான்கு வயது மதிக்கத்தக்க கடமான் அங்கிருந்த சிறிய கிணற்றுக்குள் விழுந்ததை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் வனங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனாவால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஊருக்குள் புகுந்த கடமான் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுற்றித் திரிந்துள்ளது.
அப்போது, அங்குள்ள சிறிய அளவிலான கிணற்றில் அது தவறி விழுந்து போராடிக் கொண்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றின் பக்கவாட்டு தடுப்புகளை உடைத்து கடமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் வனங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனாவால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஊருக்குள் புகுந்த கடமான் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுற்றித் திரிந்துள்ளது.
அப்போது, அங்குள்ள சிறிய அளவிலான கிணற்றில் அது தவறி விழுந்து போராடிக் கொண்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றின் பக்கவாட்டு தடுப்புகளை உடைத்து கடமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.