கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலை பாராட்டி துணிக்கடை உரிமையாளர் ரூ. 2000 வழங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலை பாராட்டி துணிக்கடை உரிமையாளர் ரூ. 2000 வழங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.
அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.
இதனை அடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகநூலில் பதிவிட்டு இருந்தனர்.
இதனை கண்ட திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அர்ஹாம் பேஷன்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வரும் அதன் உரிமையாளர் அன்வர் அந்த பெண்ணிற்கு உதவிட வேண்டும் என்று எண்ணி திண்டுக்கல்லில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் பாலமுருகனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாலமுருகன் அன்னூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு உள்ளார். கவிபிரியாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட அன்வர் அவரது நண்பரின் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் அனுப்பி வைத்து உள்ளார்.
இது குறித்து அன்வர் கூறுகையில், மக்களுக்கு உதவ வேண்டும் என தனது கால் கொலுசை விற்று கபசுர குடிநீர் காய்ச்சி கொடுத்த கவிபிரியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என எண்ணியதாகவும் 1000 ரூபாய்க்கு கால் கொலுசை விற்ற அவருக்கு தன்னால் முடிந்த உதவியாக 2000 ரூபாயை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், மதங்களை தாண்டி மனித நேயம் காக்கப்பட வேண்டும் என்றார்.
கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.
அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.
இதனை அடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகநூலில் பதிவிட்டு இருந்தனர்.
இதனை கண்ட திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அர்ஹாம் பேஷன்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வரும் அதன் உரிமையாளர் அன்வர் அந்த பெண்ணிற்கு உதவிட வேண்டும் என்று எண்ணி திண்டுக்கல்லில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் பாலமுருகனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாலமுருகன் அன்னூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு உள்ளார். கவிபிரியாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட அன்வர் அவரது நண்பரின் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் அனுப்பி வைத்து உள்ளார்.
இது குறித்து அன்வர் கூறுகையில், மக்களுக்கு உதவ வேண்டும் என தனது கால் கொலுசை விற்று கபசுர குடிநீர் காய்ச்சி கொடுத்த கவிபிரியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என எண்ணியதாகவும் 1000 ரூபாய்க்கு கால் கொலுசை விற்ற அவருக்கு தன்னால் முடிந்த உதவியாக 2000 ரூபாயை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், மதங்களை தாண்டி மனித நேயம் காக்கப்பட வேண்டும் என்றார்.