கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப.,கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப.,ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.கா.ப.,பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து கள்ளு மற்றும் சாராயம் தயாரிக்கும் குற்றச்செயல்களில் பல்வேறு நபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை 10 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20.200 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சாராய ஊறல் போடப்பட்டது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 610 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டதோடு இது சம்மந்தாக மூன்று குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, கள்ளு இறக்கி விற்பனை செய்தது தொடர்பாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1478 லிட்டர் கள்ளு கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.