கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வெள்ளம் போன்று தேங்கி நிற்கிறது.

குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், இரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நீர் தேங்கியது. பாலங்களில், சாலையோரங்களில், ரயில்வே பாலங்களுக்கு அடியில் தண்ணீர் 10 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தண்ணீர் அதிகமான பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வாகன உதவியுடன் வெளியேற்றினர். கொரொனா தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தற்போது மழை பாதிப்புகளை சரிசெய்து வருகின்றனர்.

கோவையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வெள்ளம் போன்று தேங்கி நிற்கிறது.

குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், இரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நீர் தேங்கியது. பாலங்களில், சாலையோரங்களில், ரயில்வே பாலங்களுக்கு அடியில் தண்ணீர் 10 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தண்ணீர் அதிகமான பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வாகன உதவியுடன் வெளியேற்றினர். கொரொனா தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தற்போது மழை பாதிப்புகளை சரிசெய்து வருகின்றனர்.