கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கு ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலால் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை: அன்னூர் அருகே தனது பகுதியில் வசிக்கு ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்க தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்ற ஏழை பெண்ணின் செயலால் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.
அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.
இதனையடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். கவிப்பிரயாவின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). தாயை இழந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கவிபிரியா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் மிகவும் எழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்.
அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் அப்பகுதி மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க கபசுர சூரணம் பொடி வாங்கி காய்ச்சி கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
இதில் உறுப்பினரான கவிபிரியா தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணத்தை கொடுக்க விரும்பினார்.
இதனையடுத்து, தனது கால் கொலுசை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கபசுர குடிநீரை காய்ச்சி மக்களுக்கு கொடுத்தார். கவிப்பிரயாவின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.