கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 100க்கும் மேற்பட்டவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 100க்கும் மேற்பட்டவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது.
முதல் நாளான இன்று 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனையானது நடத்தப்பட்டது.
இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்களது சளி மாதிரிகளை பரிசோதனை செய்து கொண்டனர். சுகாதாரத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் சளிமாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பரிசோதனையானது தொடர்ந்து இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. அனைத்து பத்திரிகையாளர்களும் தாமாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.