திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலான நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலான நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்க தமிழக அரசு திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியில் இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு காலத்தில் வெளியே வரும் நபர்களை கண்காணிக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை தீவிர வாகன தணிக்கை செய்யப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்க தமிழக அரசு திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியில் இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு காலத்தில் வெளியே வரும் நபர்களை கண்காணிக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை தீவிர வாகன தணிக்கை செய்யப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.