கோவை: வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாயின்றி தவித்து வரும் நலிவுற்ற மக்களுக்கு திமுக சார்பில் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை: வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாயின்றி தவித்து வரும் நலிவுற்ற மக்களுக்கு திமுக சார்பில் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எவ்வித தொழில்களும் செய்யமுடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வருவாயின்றி தவித்து வரும் மக்களுக்கு வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் நலிவுற்ற மக்களுக்கு காய்கறிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வால்பாறை தேர்தல் சிறப்பு வட்டாட்சியர் ஆர்.மூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் காய்கறி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
வால்பாறை நகர தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் செல்வம், அம்பிகை சுப்பையா இகா பொன்னுச்சாமி டென்னிஸ், செந்தில், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.