கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் நான்கு நாட்களுக்கு கோவையில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், காய்கறி மளிகை பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் நான்கு நாட்களுக்கு கோவையில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், காய்கறி மளிகை பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஹாட் ஸ்பார்ட் ஆக உள்ள சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரத்திலும் நாளை முதல் வரும் ஏப்.29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின் போது மருந்தகம் தவிர ஏனைய கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவை உக்கடம், காந்திபுரம், ரங்கேகவுண்டன் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் பொருட்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் சமூக இடைவெளிகளை மீறி மக்கள் குவிந்து வருவதால், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கும் அமலில் இருந்தாலும் நடமாடும் காய்கறி வண்டிகள் செயல்பாட்டில் இருக்கும் என மக்கள் அச்சம் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.