கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகியை கைது செய்துள்ளது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயல் - அறப்போர் இயக்கம்

கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயல் என அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயல் என அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

சிம்பிளிசிட்டி இணையதள பத்திரிக்கை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சரியான தரமான உணவு வழங்கப்படாதது குறித்தும், ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படுவதில் முறைகேடு குறித்தும் எழுதியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது. 

மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து சிம்பிளிசிட்டி பத்திரிக்கையில் எழுதியதும் இந்த கைதின் பின்புலத்தில் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை சாதாரண மக்களையும் பத்திரிக்கைகளையும் மிரட்டும் செயலாகும். 

கொரோனா தொற்று பரவல் நேரத்தில் அரசு செய்ய தவறும் பொறுப்புகளையும் முறைகேடுகளையும் சுட்டிக் காட்டுவதில் மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. அரசு அதை சரி செய்ய வேலை செய்ய வேண்டுமே தவிர இது போன்ற கைது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயலாகும். 

ஆகவே, உடனடியாக சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகி கைது ஆண்ட்ரு சாம் ராஜா பாண்டியன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...