கோவை: மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி இணையதள செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை மிரட்டுவதன் மூலம் கொரோனாவால் மருத்துவத் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைத்துவிடலாம் என கருதுவது பயனளிக்காது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக கோவையில் கைது செய்யப்பட்டுள்ள இணையதள செய்தியாளர் ஆண்ட்ரூவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை மிரட்டுவதன் மூலம் கொரோனாவால் மருத்துவத் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைத்துவிடலாம் என கருதுவது பயனளிக்காது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்களுக்கு சரியான உணவு இல்லை என செய்தி வெளியிட்டதற்காக கோவையில் கைது செய்யப்பட்டுள்ள இணையதள செய்தியாளர் ஆண்ட்ரூவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.