திருப்பூர்: திருப்பூரில் கரும் புகையை வெளியிடும் கார்பன் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கரும் புகையை வெளியிடும் கார்பன் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை கிராமத்துக்கு உட்பட்ட அவிநாசி பாளையம் புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகை காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு விவசாயிகளுக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக கடந்த ஒரு வருடமாக வருவாய் துறையினரிடம் தெரிவித்து வருவதாக கூறினர்.

மேலும், தற்போது ஊரடங்கு காலத்திலும் ஆலையை மூடாமல் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் கொண்டு இயங்கி வருவதால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அச்சம் ஏற்படும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை கிராமத்துக்கு உட்பட்ட அவிநாசி பாளையம் புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகை காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு விவசாயிகளுக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக கடந்த ஒரு வருடமாக வருவாய் துறையினரிடம் தெரிவித்து வருவதாக கூறினர்.

மேலும், தற்போது ஊரடங்கு காலத்திலும் ஆலையை மூடாமல் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் கொண்டு இயங்கி வருவதால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அச்சம் ஏற்படும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.