கோவையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரம், ஜனநாயக உரிமை கேள்விக்குறியாகி உள்ளது - கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கோவை: கோவையில் தற்போதுள்ள பேரிடர் சூழ்நிலையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

கோவை: கோவையில் தற்போதுள்ள பேரிடர் சூழ்நிலையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய உதவிகள், தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்கின்ற செய்தியை ஒளிபரப்பியதற்காக நேற்றைய தினம் கோவையில் சிம்ப்ளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனத்தின்(simplicity web media) நிருபர்கள் இருவரை கோவை காவல் துறையினர் அழைத்து சென்றனர். 

பின்னர் பல மணிநேரத்திற்கு பின்பு அவர்கள் இருவரையும் விடுவித்த காவல்துறையினர் அச்செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை கைது செய்தனர். 

இந்த நிலையில், இச்செயலானது தற்போதுள்ள பேரிடர் சூழ்நிலையில் பத்திரிகைக்கு உள்ள கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமையையும் கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 

மேலும், கோவை மாவட்ட காவல் துறையின் இத்தகைய நடவடிக்கையை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் இது போன்ற கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்களிலும் அரசு உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூவ் சாம் ராஜபாண்டியன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...