திருப்பூர்: கோவையில் செய்தியாளர்களின் கைது நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர்: கோவையில் செய்தியாளர்களின் கைது நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவையில் சிம்பிளிசிட்டி இணையதள செய்தி சேனலில் பணியாற்றிவரும் செய்தியாளர் ஜெரால்டு மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோரை இன்று கோவை வெரைட்டி ஹால் காவல்துறையினர் எந்தவித காரணமும் இன்றி கைது செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை செய்தியாளர்கள் காவல்துறையிடம் பலமுறை கேட்டும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இருந்து கைதுக்கான காரணம் தெரிவிக்காமலே இருவரையும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்கழித்துள்ளனர்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்தி பணியை மேற்கொண்டு வரும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கோவை மாநகர காவல்துறையின் இந்த செயல்பாட்டினை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இருவரையும் விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவையில் சிம்பிளிசிட்டி இணையதள செய்தி சேனலில் பணியாற்றிவரும் செய்தியாளர் ஜெரால்டு மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோரை இன்று கோவை வெரைட்டி ஹால் காவல்துறையினர் எந்தவித காரணமும் இன்றி கைது செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை செய்தியாளர்கள் காவல்துறையிடம் பலமுறை கேட்டும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இருந்து கைதுக்கான காரணம் தெரிவிக்காமலே இருவரையும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்கழித்துள்ளனர்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்தி பணியை மேற்கொண்டு வரும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கோவை மாநகர காவல்துறையின் இந்த செயல்பாட்டினை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இருவரையும் விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.