கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளையும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சத்தான உணவுகளை வழங்குவதாக இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளையும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சத்தான உணவுகளை வழங்குவதாக இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை கொரோனா எதிரொலியாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் இந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை உட்பட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு கோவை

இஎஸ்ஐ மருத்துவமனையில் நான்கு நேரமும் சத்தான உணவுகள் வழங்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறும்போது;-

தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு வழங்கப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். இதைதொடர்ந்து பதினொரு மணியளவில் சத்துமாவு கஞ்சி வழங்கப்படுகிறது.

பின்னர் வேகவைத்த முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படும். அத்துடன் பழங்களும் வழங்கப்படும். இதையடுத்து, மாலை வேளையில் சுண்டல் மற்றும் சூப்பு வழங்குகிறோம். இரவு சப்பாத்தி அல்லது உப்புமாவுடன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...