கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சிலின் 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தலில் புதிய உறுப்பினராக கே. எஸ். பாலமுருகன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சிலின் 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தலில் புதிய உறுப்பினராக கே. எஸ். பாலமுருகன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தேசிய கவுன்சிலின் 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இத்தேர்தலில் கோவை சொடல்டெக் குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் கே. எஸ். பாலமுருகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்காலம் ஒர் ஆண்டு ஆகும். இப்பதவிக்கு இவர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தேர்தலில் இவர் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல கவுன்சில் தேர்தலிலும் வெற்றி பெற்று 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினராகி உள்ளார்.
தேசிய கவுன்சிலுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பிரிவில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தீர இந்திய தொழில் கூட்டமைப்பின் மூலம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப் பாடுபடுவேன் என பாலமுருகன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தேசிய கவுன்சிலின் 2020 - 2021 ஆண்டிற்கான உறுப்பினர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இத்தேர்தலில் கோவை சொடல்டெக் குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் கே. எஸ். பாலமுருகன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்காலம் ஒர் ஆண்டு ஆகும். இப்பதவிக்கு இவர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தேர்தலில் இவர் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல கவுன்சில் தேர்தலிலும் வெற்றி பெற்று 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினராகி உள்ளார்.
தேசிய கவுன்சிலுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பிரிவில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தீர இந்திய தொழில் கூட்டமைப்பின் மூலம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப் பாடுபடுவேன் என பாலமுருகன் தெரிவித்தார்.