கோவை: ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை: ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். அதேபோல தடையை மீறி அனாவசியமாக சாலைகளிலும் பயணிக்கின்றனர்.
இதனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இருபது ஆயிரத்தை கடந்துவிட்டது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4100 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். அதேபோல தடையை மீறி அனாவசியமாக சாலைகளிலும் பயணிக்கின்றனர்.
இதனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இருபது ஆயிரத்தை கடந்துவிட்டது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4100 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.