கோவை: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 33 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு 373 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, கோவையில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 134 ஆக உள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பால் இன்று ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.