திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 



இந்த பரிசோதனையினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 

திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 



சுமார் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த பரிசோதனையை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...