கோவை: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 54 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்று உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாவட்ட சுகாதார துறை, மக்கள் தொடர்பு துறை இணைந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டு ரேபிட் டெஸ்டிங் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவர் ஜோ டேனியல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வருவாய் அலுவலர் இராமதுரைமமுருகன் உள்ளிட்டோர் பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 54 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்று உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாவட்ட சுகாதார துறை, மக்கள் தொடர்பு துறை இணைந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டு ரேபிட் டெஸ்டிங் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவர் ஜோ டேனியல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வருவாய் அலுவலர் இராமதுரைமமுருகன் உள்ளிட்டோர் பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டனர்.