கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுவனை, தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட கோவில் மேடு அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுவனை, தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் மற்றும் திவ்யா தம்பதிகளின் மகன் அபிஷேக்(6). இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வந்தனர். பின்னர் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக திவ்யா தனது கணவரை விட்டு பிரிந்து கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதிக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றார்.
அப்போது, அங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் கணவன் மனைவி போல வாழத் தொடங்கினர். அதேபோல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராஜதுரை திவ்யா வீட்டிலேயே தங்கினார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு சிறுவன் இடையூறாக இருந்ததாக தடியால் சரமாரி தாக்கினர். இதில் சிறுவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் துடிதுடித்து வீட்டில் முனங்கியபடி இருந்துள்ளான். இந்த நிலையில் உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டு உள்ளதால் டாக்டரிடம் சென்றால் போலீசில் சிக்கி விடுவோம் என்று கருதி மருந்துக் கடையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சிறுவனுக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால், சிறுவன் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த திவ்யா பிற்பகல் 3 மணி அளவில் 108 ஆம்புலன்சை அழைத்தார். இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக திவ்யா மற்றும் ராஜ துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 401 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.