கோவை: வால்பாறை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரசவத்திற்கு பின் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை திரும்பியுள்ளார் வால்பாறை புது மார்க்கெட் காந்திநகர் பகுதியில் அவர் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக. அவர் தங்கியிருந்த காந்தி நகர், வால்பாறை மார்க்கெட் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டது.

வால்பாறை நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் முற்றிலும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் வால்பாறை மார்க்கெட் பகுதி நகை கடை வீதி, கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் நகராட்சி கொரோனா தடுப்பு பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வால்பாறை பகுதி மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் மீறி நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரசவத்திற்கு பின் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை திரும்பியுள்ளார் வால்பாறை புது மார்க்கெட் காந்திநகர் பகுதியில் அவர் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக. அவர் தங்கியிருந்த காந்தி நகர், வால்பாறை மார்க்கெட் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டது.

வால்பாறை நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் முற்றிலும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் வால்பாறை மார்க்கெட் பகுதி நகை கடை வீதி, கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் நகராட்சி கொரோனா தடுப்பு பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வால்பாறை பகுதி மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் மீறி நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டு வருகிறது.