கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது - 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

144 தடை உத்தரவு உள்ள அத்தியாவசிய தேவைகளை தாண்டி பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனையும் மீறி வெளியே வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை அடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மட்டும், குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் இதனை அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது. 

இதனிடையே, கிடைத்த தகவலை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அறிவுரையின் பேரில் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் அரவிந்தராஜ், காவலர்கள் மகேந்திரன், பிரகாஷ்ராஜ், யுவராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சோமனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள பவானி ஏஜன்சீஸ் மற்றும் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் இயங்கி வரும் ராம்தேவ் ஏஜன்சீஸ் ஆகிய கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பாராவ் மற்றும் சிகல்லால் ஆகியோரை கைது செய்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் கூல் லிப் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...