கோவை: பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும் விதமாக கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோவை: பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும் விதமாக கோவையில் வெளியிடப்பட்ட எமலோகத்தில் ஆஃபர் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
உலகம் முழுவதும் பெரும் உயிர்பலிகள் மற்றும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சாலைகளில் மக்கள் நடமாடுகின்றனர்.
இந்நிலையில், கோவை பசிஃபிக் மீடியா தயாரிப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் குறும்படத்தை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகம்மது கதை, திரைக்கதை, வசனம் எழுத சோபன் சேதுபதி இயக்கியுள்ளார். சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சித்திரகுப்தன் மற்றும் எமதர்மராஜா என இரு வேடங்களை கொண்டு "விழித்திரு விலகி இரு வீட்டிலேயே இரு!" எனும் கருத்தை மையமாக வைத்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெளியிட்டார். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் குறும்படத்தை யூ டியூப்பில் வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்காமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் நோய் தொற்றுக்குள்ளாகி மரணங்கள் அதிகம் ஏற்படும் எனவும் அதனால் யாரும் வெளியே வராமல் காவல்துறை மற்றும் அரசின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுவதற்காக இந்த "எமலோகத்தில் ஆஃபர் டில் 144" எனும் குறும்படத்தை உருவாக்கி உள்ளனர்.
மேலும், காவல் துறையினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வெளியே சுற்றும் பொதுமக்கள் இந்த குறும்படத்தை பார்த்தாவது திருந்துவார்களா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகம் முழுவதும் பெரும் உயிர்பலிகள் மற்றும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சாலைகளில் மக்கள் நடமாடுகின்றனர்.
இந்நிலையில், கோவை பசிஃபிக் மீடியா தயாரிப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் குறும்படத்தை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகம்மது கதை, திரைக்கதை, வசனம் எழுத சோபன் சேதுபதி இயக்கியுள்ளார். சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சித்திரகுப்தன் மற்றும் எமதர்மராஜா என இரு வேடங்களை கொண்டு "விழித்திரு விலகி இரு வீட்டிலேயே இரு!" எனும் கருத்தை மையமாக வைத்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெளியிட்டார். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் குறும்படத்தை யூ டியூப்பில் வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்காமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் நோய் தொற்றுக்குள்ளாகி மரணங்கள் அதிகம் ஏற்படும் எனவும் அதனால் யாரும் வெளியே வராமல் காவல்துறை மற்றும் அரசின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுவதற்காக இந்த "எமலோகத்தில் ஆஃபர் டில் 144" எனும் குறும்படத்தை உருவாக்கி உள்ளனர்.
மேலும், காவல் துறையினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வெளியே சுற்றும் பொதுமக்கள் இந்த குறும்படத்தை பார்த்தாவது திருந்துவார்களா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.