சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மே 3ஆம் தேதி வரை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாநில அரசு, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை எனவும் மே 3ம் தேதி ஊரடங்கு தொடரும் என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் எனவும் நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மே 3ஆம் தேதி வரை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாநில அரசு, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை எனவும் மே 3ம் தேதி ஊரடங்கு தொடரும் என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் எனவும் நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.