நீலகிரி: நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் பல்வேறு இடங்களில் 35 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் பல்வேறு இடங்களில் 35 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்கலுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கூடலூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூடலூர் ஆனைசெத்த கொல்லி பகுதியில் கள்ளச்சாராயம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையிலான தனிப்படையினர் மணிதுரை, சியாபுதீன், குனா, மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்து பிரதீப் என்பவனை பிடித்து விசாரணை நடத்தி அவனிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வேறு சிலர் கள்ளச்சாராயம் காய்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கண்காணித்து அதே பகுதியைச் சேர்ந்த காளிசெல்வன், விஜய் என்ற இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 16 லிட்டர் ஊறல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, முருகேசன் என்பவனை பிடித்து அவனிடமிருந்து 15 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது. மேலும், பெரியசோலை பகுதியில் வைத்து சுபேஷ் என்பவரை பிடித்து அவரிடமிருந்து 7 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது.
நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் 35 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்கலுக்கு வந்த தகவலை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கூடலூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூடலூர் ஆனைசெத்த கொல்லி பகுதியில் கள்ளச்சாராயம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையிலான தனிப்படையினர் மணிதுரை, சியாபுதீன், குனா, மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்து பிரதீப் என்பவனை பிடித்து விசாரணை நடத்தி அவனிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வேறு சிலர் கள்ளச்சாராயம் காய்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கண்காணித்து அதே பகுதியைச் சேர்ந்த காளிசெல்வன், விஜய் என்ற இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 16 லிட்டர் ஊறல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, முருகேசன் என்பவனை பிடித்து அவனிடமிருந்து 15 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது. மேலும், பெரியசோலை பகுதியில் வைத்து சுபேஷ் என்பவரை பிடித்து அவரிடமிருந்து 7 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது.
நீலகிரியில் நேற்று ஒரே நாளில் கூடலூர் மற்றும் நியூஹோப் பகுதியில் 35 லிட்டர் ஊறல் சாராயம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.