கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்..!

கோவை: கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு வாரங்கள் மிக முக்கியமான வாரங்கள் என்பதால் ஊரடங்கை உத்தரவை போலீசார் கடுமையாக்கி வருகின்றனர். 

அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் சுற்றுவோரின் வாகனங்களில் வண்ணப் பெயிண்ட் பூசப்பட்டு மறு முறை வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு பகுதிகளில் இளைஞர்கள் கூடி பேசுவது விளையாடுவது போன்ற செயல்படுவதால் நகர் புறங்களில் உள்ள தெருக்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், இடையர்பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை துவங்கி உள்ளனர். 

அதேபோல, தனிமை படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரேனும் வெளியேறுகிறார்களா என்பதையும் கண்காணிக்கின்றனர். கேமராவை பார்த்தால் கூடி நிற்கும் பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு செல்வதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் போத்தனூர் சுந்தராபுரம் பகுதிகளிலும் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...