கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதி பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதி பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் அனைத்து டீன்களுக்கும் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக அலுவலர்கள், துறைகளின் தலைவர், கே.வி.கேக்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் பணிக்கு திரும்ப அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளின் முழு வளாகத்தையும் கிருமிநாசினிகளுடன் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, ஊழியர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளுக்கு மருத்துவ குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள ஊழியர்களை , இன்னும் இரண்டு நாட்களில் பணிக்கு திரும்ப உத்தரவிட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் அனைத்து டீன்களுக்கும் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக அலுவலர்கள், துறைகளின் தலைவர், கே.வி.கேக்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் பணிக்கு திரும்ப அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளின் முழு வளாகத்தையும் கிருமிநாசினிகளுடன் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, ஊழியர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பிற விவசாய கல்லூரிகளுக்கு மருத்துவ குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள ஊழியர்களை , இன்னும் இரண்டு நாட்களில் பணிக்கு திரும்ப உத்தரவிட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.