நீலகிரி: கூடலூரை அடுத்த குனில்வயல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி: கூடலூரை அடுத்த குனில்வயல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குனில்வயல் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானைகள் சுப்பிரமணியம் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தின. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிா்தப்பினா்.
இதைத் தொடா்ந்து அப்பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த அந்த யானைகள் மீண்டும் சுப்பிரமணியத்தின் வீட்டைத் தாக்கி முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. வீடு சேதமடைந்ததால் அக்குடும்பத்தினர் அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கூடலூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாக்கியநாதன், காவலா் பிரமோத் ஆகியோா் வியாபாரி ஒருவரின் உதவியுடன் உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி அந்த குடும்பத்துக்கு வழங்கினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குனில்வயல் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானைகள் சுப்பிரமணியம் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தின. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிா்தப்பினா்.
இதைத் தொடா்ந்து அப்பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த அந்த யானைகள் மீண்டும் சுப்பிரமணியத்தின் வீட்டைத் தாக்கி முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. வீடு சேதமடைந்ததால் அக்குடும்பத்தினர் அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கூடலூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாக்கியநாதன், காவலா் பிரமோத் ஆகியோா் வியாபாரி ஒருவரின் உதவியுடன் உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி அந்த குடும்பத்துக்கு வழங்கினா்.