கோவையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்து உதவிய காவல் உதவி ஆய்வாளர்!

கோவை: கோவையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்த உதவிய காவல் உதவி ஆய்வாளரின் செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை: கோவையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்த உதவிய காவல் உதவி ஆய்வாளரின் செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் கதவு எண் 60 அழகப்ப செட்டியார் ரோடு காந்திபுரம் என்ற முகவரியில் குடியிருக்கும் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பவுனம்மாள் என்பவர் தனது வாரிசுகள் தன்னை கைவிட்ட நிலையில் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.

இவருக்கு அரசு கொடுத்த ரூபாய் ஆயிரத்தில் 800 ரூபாய்க்கு பொருள் வாங்கியது போக மீதி இருந்த 200 ரூபாயில் ஒரு வாரம் செலவு செய்து விட்டதாகவும், தற்போது சாப்பாட்டிற்கு கூட பணம் ஏதும் இல்லை என்றும் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக பல பேரிடம் உதவி கேட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் தெரிந்து காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி அவர்கள் மேற்படி வயதான பெண்மணியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 50 கிராம் மஞ்சள் தூள், 50 கிராம் சாம்பார் தூள், 50 கிராம் மல்லி தூள், 50 கிராம் ரச தூள், 50 கிராம் கடுகு, அரை கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், அரை கிலோ, உருளைக்கிழங்கு, பிஸ்கட் மற்றும் ரொட்டி ஆகியவற்றை வழங்கி உதவி செய்துள்ளார்.

80 வயது மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...