கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும், இந்த பெண் கடந்த 12ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணுக்கு தொற்று இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், பெண்ணின் கணவர் உள்ளிட்ட 12 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும், இந்த பெண் கடந்த 12ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண்ணுக்கு தொற்று இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், பெண்ணின் கணவர் உள்ளிட்ட 12 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.