கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினர்.
உலகையே உலுக்கி வரும் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும், காவல்துறையும், தூய்மைப் பணியாளர்கள் துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மருத்துவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களை குணப்படுத்தும் நோக்கில் சிகிச்சை முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தொற்றால் அனுமதிக்கப்படும் பலர் சிகிச்சைகள் முடிந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து முதற்கட்டமாக ஐந்து பேரும், இரண்டாம்கட்டம் ஆறு பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 9 பேர், பொள்ளாச்சியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் குணமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த 15 பேரும் மருத்துவமனை வாசலில் வைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.