கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட காவல்துறையினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட காவல்துறையினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள பகுதியின் அருகில் காவல் நிலையமும் அதன் பின்புறம் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளது.
மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள இடத்தின் பின்புறம் தனியார் மருத்துவனையும் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் சற்று தொலைவில் அமைந்து இருந்தாலும் பேருந்துகள் இங்கு தான் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. மக்கள் இங்கு இருந்து ஏறுவது வழக்கமான ஒன்றாக கொண்டு இருந்தனர்.
144 தடை உத்தரவின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக மின்தடை ஏற்பட்டு உள்ளதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள பகுதியின் அருகில் காவல் நிலையமும் அதன் பின்புறம் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளது.
மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ள இடத்தின் பின்புறம் தனியார் மருத்துவனையும் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் சற்று தொலைவில் அமைந்து இருந்தாலும் பேருந்துகள் இங்கு தான் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. மக்கள் இங்கு இருந்து ஏறுவது வழக்கமான ஒன்றாக கொண்டு இருந்தனர்.
144 தடை உத்தரவின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக மின்தடை ஏற்பட்டு உள்ளதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.