வால்பாறை நகராட்சி மூலம் கூட்ட நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைப்பு

கோவை: வால்பாறை நகராட்சி மூலம் கூட்ட நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.

கோவை: வால்பாறை நகராட்சி மூலம் கூட்ட நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கு மேலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது தேவைக்காக அடிக்கடி வால்பாறை நகருக்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், கூட்டம் கூட்டமாக வருவதால் வால்பாறையில் சமூக விலக்கு கேள்விக்குறியாகிறது. குறிப்பாக மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சிக் கடைகளில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். 



இதனை கட்டுப்படுத்த வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில், வால்பாறை நடுமலை பாலம், காமராஜ் நகர், பிஏபி கேட், புதிய பேருந்து நிலையம் அருகில் நல்ல காத்து சாலை மற்றும் சோலையார் அணை சாலையில் கரும் பாலம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக வால்பாறை நகருக்கு வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு உள்ளவரை இந்த சோதனைச் சாவடிகள் இயங்கும் என வால்பாறை ஆணையர் தெரிவித்தார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...