வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை புலி மர்ம மரணம்; வனத்துறை விசாரணை

கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான கரடிகள், புலிகள், சிறுத்தைகள், யானைகள் உள்ளன. 

இந்நிலையில், வால்பாறை அடுத்த ஊசிமலை மட்டம் என்ற எஸ்டேட்டில் சிறுத்தை புலியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் உடலை கைப்பற்றி ரொட்டிக் கடையிலுள்ள வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் சிறுத்தை புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 

தொடர்ந்து வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் சிறுத்தை புலியின் உடலை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறுத்தைப்புலியின் உடலின் முக்கிய பாகங்கள் கோவையில் உள்ள வன ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பின் சிறுத்தை புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும், இறந்தது ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...