கோவை: கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
அதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு பணி முடிந்த பிறகு இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுத்த சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து கட்டுப்பாடுகளும் அரசு மருத்துவமனை டீனின் கீழ் இருந்தன. இது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் கம்யூனிட்டி மெடிசன் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
அதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு பணி முடிந்த பிறகு இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுத்த சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து கட்டுப்பாடுகளும் அரசு மருத்துவமனை டீனின் கீழ் இருந்தன. இது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் கம்யூனிட்டி மெடிசன் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.