நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எஸ்.கைகாட்டியில் நெடுகுளா ஊராட்சியில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரம்!

நீலகிரி: நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள எஸ்.கைகாட்டியில் நெடுகுளா ஊராட்சியில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி: நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள எஸ்.கைகாட்டியில் நெடுகுளா ஊராட்சியில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த கொடிய வைரஸ் கிருமியை பரவாமல் தடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.கைகாட்டி பகுதியில் கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 5 கிராமப் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிக்குள் வெளி நபா்கள் யாரும் செல்லாத முடியாத படியும், உள்ளிருப்பவா்கள் வெளியே வர முடியாத படியும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கான தேவையான அத்தியாசியப் பொருள்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெடுகுளா ஊராட்சி எஸ்.கைகாட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுபடி. ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பாஸ்கர் தலைமையில் கோத்தகிரி ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் சதிஷ், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் இணைந்து தூய்மை பணியாளர்கள் மூலம் எஸ்.கைகாட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்திலும் தீவிரமான சுகாதார பணிகளை செய்து வருகின்றனர். 



இத்துடன் நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம சாலைகள், கால்வாய்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...