குன்னூர் பர்லியார் பஞ்சாயத்து சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

நீலகிரி: குன்னூர் பர்லியார் பஞ்சாயத்து சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி: குன்னூர் பர்லியார் பஞ்சாயத்து சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குரும்பாடி, வடுகன் தாேட்டம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு பர்லியார் பஞ்சாயத்து சார்பில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு தலைமை தாங்கினார். பர்லியார் பஞ்சாயத்து தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என்று பர்லியார் பஞ்சாயத்து துணை தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான தீனதயாள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து செயலாளர் செந்தில் குமார் மற்றும் கணிப்பாெறியாளர் ஆல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...