திருப்பூர்: பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 102 ரூபாய் கொள்முதல் விலையை எட்டியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 102 ரூபாய் கொள்முதல் விலையை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலமாக பரவுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது. தொடர்ந்து அரசு தரப்பில் கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவாது என்ற விழிப்புணர்வை அடுத்து கோழி இறைச்சி விலை சரிவில் இருந்து மீள துவங்கியது.
இந்நிலையில், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது. தற்பொழுது கோழி இறைச்சிக்கு நுகர்வு அதிகரித்துள்ளதால் 102 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது அதன் பின்னர் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது ஒர் ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலை 94 இன்று 8 ரூபாய் உயர்ந்து 102 ரூபாயாக நிர்ணயம்.
இதன் காரணமாக கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கிலோ இறைச்சி 200 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலமாக பரவுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது. தொடர்ந்து அரசு தரப்பில் கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவாது என்ற விழிப்புணர்வை அடுத்து கோழி இறைச்சி விலை சரிவில் இருந்து மீள துவங்கியது.
இந்நிலையில், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது. தற்பொழுது கோழி இறைச்சிக்கு நுகர்வு அதிகரித்துள்ளதால் 102 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது அதன் பின்னர் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது ஒர் ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலை 94 இன்று 8 ரூபாய் உயர்ந்து 102 ரூபாயாக நிர்ணயம்.
இதன் காரணமாக கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கிலோ இறைச்சி 200 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.