நீலகிரி: உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
நீலகிரி: உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், நேற்று வரை, 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் வருவாய் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை ஆகியோர் இணைந்து தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுமார் தலா 80 ஆயிரம் மதிப்பிலான கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.

உதகை தற்காலிக உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி நுழைவு வாயிலை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் புத்திசந்திரன், அமைப்பு செயலாளர் கே.ஆர்.ஆர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, இளைஞர் அணி மாவட்ட செயலாளரும் நீலகிரி மத்திய கூட்டுறவு தலைவருமான கப்பச்சி வினாத், கண்டோன்மெண்ட் துணை தலைவர் பாரதியார், நகர செயலாளர் சண்முகம், பாசறை செயலாளர் அக்கீம்பாபு, சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, ஓசிஎஸ் தலைவர் ஜெயராமன், வெலிங்டன் நகரிய செயலாளர் துரைராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், நேற்று வரை, 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் வருவாய் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை ஆகியோர் இணைந்து தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுமார் தலா 80 ஆயிரம் மதிப்பிலான கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.

உதகை தற்காலிக உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி நுழைவு வாயிலை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் புத்திசந்திரன், அமைப்பு செயலாளர் கே.ஆர்.ஆர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, இளைஞர் அணி மாவட்ட செயலாளரும் நீலகிரி மத்திய கூட்டுறவு தலைவருமான கப்பச்சி வினாத், கண்டோன்மெண்ட் துணை தலைவர் பாரதியார், நகர செயலாளர் சண்முகம், பாசறை செயலாளர் அக்கீம்பாபு, சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, ஓசிஎஸ் தலைவர் ஜெயராமன், வெலிங்டன் நகரிய செயலாளர் துரைராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.