நீலகிரி: தெற்காசியாவில் புகழ்பெற்ற மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கட்டப்பாட்டில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் 8 மணிநேரத்தில் 80 காெராேனா பாதிக்கப்பட்டவர் குறித்து ஆய்வு அறிக்கை தர முடியும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவக்குமார் கூறியுள்ளார்.
நீலகிரி: தெற்காசியாவில் புகழ்பெற்ற மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கட்டப்பாட்டில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் 8 மணிநேரத்தில் 80 காெராேனா பாதிக்கப்பட்டவர் குறித்து ஆய்வு அறிக்கை தர முடியும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவக்குமார் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதலுடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரிசோதனை மேற்கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இயங்கிவரும் பாஸ்டர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் ஆரம்பக் காலகட்டம் முதல் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ராபீஸ் நோய் கண்டறியும் மையமாகவும் செயல்படுவதுடன் நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் மாற்ற உலக தர கட்டுமானம், உள்கட்டமைப்பு பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளன.
இந்த ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா பரிசோதனைக்கான உட்கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளதால் மத்திய அரசின் ஒப்புதலுடன் இங்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்ய தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் ஆர்.டி.பி.சி.ஆர். மைப்பிற்கு அனுமதிக்காக விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தும் காெராேனா வைரஸ் தெற்று ஒருவருக்கு உள்ளதை உறுதிப் படுத்த முடியும். இதற்காக புனே, காேவை, உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதிரிகள் அனுப்பி ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்து உடனடியாக சிகிச்சைகள் மேற்காெள்ள வசதியாக இருக்கும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதலுடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரிசோதனை மேற்கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இயங்கிவரும் பாஸ்டர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் ஆரம்பக் காலகட்டம் முதல் வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ராபீஸ் நோய் கண்டறியும் மையமாகவும் செயல்படுவதுடன் நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் மாற்ற உலக தர கட்டுமானம், உள்கட்டமைப்பு பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளன.
இந்த ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா பரிசோதனைக்கான உட்கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளதால் மத்திய அரசின் ஒப்புதலுடன் இங்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்ய தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் ஆர்.டி.பி.சி.ஆர். மைப்பிற்கு அனுமதிக்காக விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தும் காெராேனா வைரஸ் தெற்று ஒருவருக்கு உள்ளதை உறுதிப் படுத்த முடியும். இதற்காக புனே, காேவை, உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதிரிகள் அனுப்பி ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்து உடனடியாக சிகிச்சைகள் மேற்காெள்ள வசதியாக இருக்கும் என்று பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் கூறியுள்ளார்.